Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவலை தடுக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்: 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

ஜுலை 08, 2021 04:42

புதுடெல்லி: சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் கோவிட்டை கட்டுப்படுத்த உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில அரசுகளுக்கு , சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: நாட்டில், தினசரி கோவிட் பாதிப்பு குறைந்து வந்தாலும், வாரந்தோறும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், தொற்று பரவும் வேகத்தின் அறிகுறியையும் கண்காணிக்க வேண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவது முக்கியம். தொற்றை கட்டுப்படுத்துவதற்கு , தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்